வெள்ளி, 19 மே, 2023

பண்டிதரின் பேரொளி.



பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின்   பிறந்த தினம் இன்று(மே-20).

இலங்கை சென்று பௌத்தம் தழுவிய பண்டிதர், இந்திய மண்ணில் பௌத்தத்தின்  வேர்களை ஆராயத்துவங்கினார். அந்த ஆராய்ச்சியின் முடிவு, நாகரீகமற்றவர்கள், கீழானவர்கள் என்றெல்லாம் முத்திரைக் குத்தப்பட்ட சேரி மக்களின் வாழ்க்கையில் வந்து நின்றது. அதுநாள் வரை உதிரிமக்காளக கருதப்பட்டுவந்த சேரி மக்களின் வரலாறு இந்திய மண்ணின் தனித்துவமான பௌத்ததில் தொடங்குவதை அவர் கண்டடைந்து மீட்டெடுத்தார். தமது ஆழ்ந்த தேடல் ஞானத்தால் அவர் வரலாறற்ற மக்களாய் கருத்தப்பட்டவர்களுக்கு பூர்வ வரலாற்று மேடையமைத்தார். 

பண்டிதரின் வருகை இந்திய பௌத்த மீட்டுருவாக்க வரலாற்றின் புதிய அத்தியாங்களை உருவாக்கியது; அவரின் சிந்தனையாலும் செயற்பாட்டாலும் பௌத்தம் மறுஉயிர் பெற்றது.

பண்டிதரை வரலாறு உருவாக்கியது; வரலாற்றை பண்டிதர் மீளப்பெற்றார். அவர் பெற்ற ஞானத்தின் வழியே ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான புதிய வெளிச்சம் பிறந்தது. வேஷபிராமணியத்தின் கண்களைக் கூசவைத்த அப்பேரொளி, அதுவரை இருண்டிருந்த இந்திய அறத்தினை மிளிரச் செய்தது. 

பண்டிதரின் பணிகள் பண்டிதரோடு நிற்கவில்லை; இன்றும் பண்டிதரின் பேரொளி இருளைத் தேடித் தேடி விழுங்கிக் கொண்டிருக்கிறது. இருள் அகற்றி விடிவைக் கொடுக்கும் வல்லமைக் கொண்ட அப்பேரொளியில் இச்சமூகம் விடுதலையைக் காணும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...