திங்கள், 15 ஜனவரி, 2024

சிதறு தேங்காயும் சிதறும் பண்பாடும்.


ஸ்டாலின் தி

சீமான் குழுவினர் பொங்கலைக் கொண்டாடும் வகையில் 'சிதறு தேங்காய்' விளையாடி மகிழும் காணொளி ஒன்று காணக் கிடைக்கிறது. பலரும் அதை கண்டு சிரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது வெறுமனே நகைப்புக்கானக் காட்சி அல்ல.  பார்ப்பனியம் வெகுமக்களின் வழிபாட்டை 'சிதறடித்த' வரலாறு அதில் இருக்கிறது.

பார்ப்பனர்கள் சிதறு தேங்காய் உடைத்து யாரேனும் பார்த்திருந்தால் அது அரிது; அதிலும், சிதறடிக்கப் பட்ட  தேங்காயை பொறுக்கித் தின்னும் பார்ப்பனர்களை பார்த்திருக்கவே முடியாது. ஏன்? 

பார்ப்பனர்கள் தங்களுக்குத் தேவையான தேங்காயை நாகரீகமாக 'அர்ச்சனைத் தட்டில்' வைத்து வாங்கிக் கொள்ளுவார்கள். ஆனால்,  'சூரைத் தேங்காய் உடை' என்று மக்களுக்கு கூறுவார்கள். அந்த தேங்காய் சிதறும் போது தோஷங்களும் சிதறும், சிதறிக் கிடக்கும் தேங்காயை பொறுக்கித் தின்றால் அனுகூலம் சேரும் என்று பொய்யுரைத்தார்கள். இதன் மூலம், பக்குவமாக பகிர்ந்து கொடுக்க வேண்டிய பண்டத்தை (தேங்காயை) தரையில் அடித்து சிதற வைத்தார்கள்.   சிதறடிக்கும் பட்ட தேங்காயை தின்ன வைத்து மக்களை 'பொறுக்கித் தின்னும் கூட்டம்' ஆக ஆக்கினார்கள். 
பார்ப்பனர்களின் வழிபாடு 'பக்குவப்பட்டது' என்றும் பாமர  வழிபாடு 'ஒழுங்கற்றது' என்றும் இதன் மூலம் நிறுவப்பட்டது. 

இந்த பார்ப்பனிய சூழ்ச்சியை கட்டுடைக்காமல், சிதறு தேங்காய் உடைக்கும் முறையை கொண்டாடுவதென்பது நம்மை நாமே பொறுக்கித் தின்னும் கூட்டம் என்று நிறுவிக் கொள்ளுவதற்கு சமமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...