ஸ்டாலின் தி
சற்றுக் கவனித்தால் தெரியும். அக்ரஹாரங்களில், வேறு சில நிலவுடமை சாதியினரின் தெருக்களில் தெருநாய்களை காண்பது அரிது. ஆனால் சேரியில் நிறைய பார்க்கலாம்.
காரணம் எளிது. நாய்க்கு கூட சோறு வைக்க மனம் இல்லாதவர்கள் வாழும் தெருக்களை நாய்கூட எட்டிப்பார்க்காதுதானே! ஆனால் சேரி அப்படியல்ல. நான் சிறுவனாக இருந்த போழ்து எங்கள் சேரியில் இரவு உணவு பெரும்பாலான வீடுகளில் வீட்டு வாசலில்தான். தெருவெங்கும் புழுங்கல் அரிசி சோற்று மனமும் விதவிதமான குழம்புகளின் மனமும் வீசும். இரவு நேர பிட்சைக்காரர்களும் இல்லறத்தாரோடு அமர்ந்து வாசலில் கதைபேசியபடியே சோற்றை உண்ணுவார்கள். பக்கத்து வீட்டு பாட்டி வெறும் சோற்றோடு வந்து இரண்டு கரண்டி குழம்பூற்றிச் செல்லுவார். மறுசோறு போட்டு வருபவர்களிடம் 'அந்த நாய்க்கும் சேத்து போட்டு வா' என்பார் சோறுண்பவர். அதைக் கேட்டவுடன் அதுவரை தெரு ஓரத்தில் அடைந்து கிடந்த தெருநாய் அருகில் வந்து நிற்கும். அதற்கு சோற்றுருண்டையை வைத்து விட்டு இரவு உணவை முடிக்கும் கலாச்சாரம் இருந்த இடம்தான் எங்கள் சேரி. ஆனால் இன்றைக்கு யார் வீட்டு வாசலிலும் யாரும் சாப்பிடுவதில்லை. குளிர்ப்பதனப் பெட்டிகளில் மீந்த உணவு உறைந்து விடுகிறது. எனவே யார்வீட்டு வாசலிலும் நாயும் நிற்பதில்லை. இதையறிந்த சாதிவெறிக்கும்பல் அந்த நாய்களுக்கான சோற்றை எங்களுக்கு போடுங்கள் என்று வருகிறது.
(முகநூல் பதிவு/2017)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக