வியாழன், 14 மார்ச், 2024

குறுஞ்சாங்குளப் போராளிகள்!



ஸ்டாலின் தி 



தங்களது வழிபாட்டு தெய்வமான காந்தாரியம்மனுக்கு  சிலையெழுப்பிக்  கோயில் கட்ட முடிவெடுத்தார்கள் தென்காசி மாவட்டம், குறுஞ்சாங்குளம் கிராமத்தைச் சார்ந்த  தலித்(பறையர்)மக்கள். சேரி மக்களின் தனித் தன்மையான வழிபாட்டு முயற்சி, நாயக்க இந்துக்களுக்கு கோபத்தை மூட்டியது. சேரிக்கு மட்டுமல்ல சேரியின் தெய்வத்திற்கும் கூட தாங்கள்தான் ஆண்டைகள் என்கிற சாதி வெறியே அந்தக் கோபத்திற்கான அடிப்படைக் காரணம். சாதி வெறியர்களின் முற்றிப்போன கொலை வெறி, சக்கரை,அம்பிகாபதி, சுப்பையா, அன்பு எனும் நான்கு தலித்துகளை படுகொலை செய்தது. இரவு வேளையில் சினிமாவுக்குப் போன அந்த நான்கு பேரும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்களின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு அவர்களின் வாயில் சொருகப்பட்ட நிலையில்தான் அந்த நான்கு தலித்துகளும் பிணங்களாகக் கிடந்தனர். இக்கொடுரக் கொலையில் 27 சாதிவெறியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2001 இல் அனைவரையும் விடுதலை செய்தது நீதிமன்றம்.

குறுஞ்சாங்குளம் உரிமைக் களத்தில் கொல்லப்பட்ட  நான்கு போராளிகளின் நினைவு நாள் மார்ச் 14(1992).

வீர வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கூட்டன்பர்க் அச்சுக்கும் முன்னவே அச்சாகி வந்த பௌத்த நூல்கள்.

     வஜ்ர சூத்திர நூல் அட்டைப்படம் ஸ்டாலின் தி  ஜெர்மனியைச் சார்ந்த கூட்டன் பர்க், நகரும் எழுத்துருக்களை உருவாக்கி கி.பி.1450 இல...