புதன், 13 மார்ச், 2024

பௌத்த அறிஞர் ஏ.பி.பெரியசாமி புலவர்.


ஸ்டாலின் தி


பண்டிதர் அயோத்திதாசர் அவர்களுடன் இணைந்து பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில், தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் ஜயா ஏ.பி.பெரியசாமி புலவர் அவர்கள். 1907ஆம் ஆண்டு நூற்றுக் கணக்கானவர்களோடு பௌத்தத்தைத் தழுவியவர் பெரியசாமிப் புலவர். 'பார்ப்பனரல்லாதோர்  அரசியல்' எனும் தலித்தல்லாதோர் அடையாள அரசியலுக்கும் முன்னவே, பார்ப்னர்களை கேள்விக்குட்படுத்தும் வகையில், 1909 ஆம் ஆண்டு, மே மாதம் 18 ஆம் தேதியில், திருப்பத்தூர் துணை ஆட்சியர் அலுலகத்திற்கு அருகில், 'யதார்த்த பிராமணர் யார்?' எனும் தலைப்பில், பிக்கு விசுதா தலைமையில் மாநாடு நடத்தியவர் புலவர். கோலார் தங்கவயலில் பௌத்த எழுச்சியை ஏற்படுத்திய பண்டிதரின் இயக்கத்தாரில், பெரியசாமி புலவர் தளபதியாகத் திகழ்ந்தார். கோலார், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருபத்திரெண்டு பௌத்த மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தினார். 

கரந்தை தமிழ்ச்சங்கத்தால் புலவர் பட்டம் பெற்றவரான அவர், சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். தமிழன் இதழில் தொடர்ந்து பகுத்தறிவு சிந்தனையை எழுதியும் வந்துள்ளார். 1922 இல், திருப்பத்தூரில் பௌத்த விகாரை நிறுவியவர் புலவர். பண்டிதரின் மறைவுக்குப் பிறகு புலவரிடம், ஈவெரா பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நெருக்கமாக இருந்துள்ளது. அவர்களின் அன்றைய பார்ப்பனரல்லாதோர் அரசியலுக்கு, பண்டிதரின் சீடரான புலவரின் சிந்தனைகளும் பயன்படுத்தப்பட்டன.

சிறந்த பூர்வகுடி பௌத்தர் வரலாற்றறிஞரான, அறிஞர் தி.பெ.கமலநாதன் அவர்களின் தந்தையும், எமது பௌத்த மறுமலர்ச்சியின் வழிக்காட்டியுமான பேரறிஞர் ஏ.பி.பெரியசாமி அவர்கள், 1939 இல் பரிநிப்பானம் அடைந்தார்.

ஜயா.ஏ.பி.பெரியசாமி அவர்களின் பிறந்த தினம்: மார்ச்-14.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...