வியாழன், 27 ஜூன், 2024

ஐயா அன்பு பொன்னோவியம்.


ஸ்டாலின் தி 


மலேசியாவில் 1923 இல், அன்பு பெருமாள்பிள்ளை-கங்கையம்மாள் தம்பதியருக்கு மகனாய் பிறந்த  பொன்னோவியம் அவர்கள்,1933 இல் தம்முடை தாத்தாவுடன் தமிழகம் வந்தார். சென்னை எழும்பூர் ஓவியக்கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், இளம் வயது முதலே சமூக சிந்தனையில் வளர்ந்துவந்தார். இந்திய தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்து கடமையாற்றி 1951 இல் அருங்காட்சியக பொறுப்பு அலுவலராக உயர்வு பெற்றார். அவருடைய வரலாற்று ஆர்வமும் சமூக விடுதலைத் தாகமும்  தலித் சமூக-அரசியல் தரவுகளை  சேகரிக்கவைத்து. பண்டிதர் மற்றும் அவர் காலத்திய, அதற்கும் பிந்தைய கால சிந்தனையாளர்களின் பணிகள், கருத்துகள் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதில் பெரும் பங்காற்றினார். தாங்களே சேரியின் ரட்சகர்கள் என்று புளுகிக் கொணடிருந்த இந்து நாத்தீகர்களோடு தமது எழுத்துத் திறனால் கடுமையாக கருத்துப் போரிட்டு வென்றார். 

*தலித் வரலாற்று ஆய்வாளரும் பௌத்த அறிஞருமான அன்பு பொன்னோவியம் அவர்களின் நினைவு நாள்-ஜூலை28.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தீட்சா தின குறிப்புகள்.

ஸ்டாலின் தி 1  1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில்...