வியாழன், 27 ஜூன், 2024

வி.ஜி.வாசுதேவப்பிள்ளை.





ஸ்டாலின் தி


1878 இல்  தலித்(பறையர்‌) குடும்பத்தில் பிறந்தவர் வி.ஜி.வாசுதேவப் பிள்ளை.‌ இசை,தமிழ், வடமொழி ஆகியவற்றில் புலமைத்துவம் பெற்றவர். இந்தியாவில் நகராட்சியில் பொறுப்பு வகித்த முதல் அட்டவணை சமூகத்தவராவார். சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரலில் உயர்பதவி வகித்து, பிறகு கடப்பாவில் கௌரவ நீதிபதியாக இருந்தவர். சென்னை மாகான சட்டமேலவை உறுப்பினராக இருந்து, பூர்வகுடி மக்களின் கல்வி, சுகாதாரம், நில உரிமை, தொழில் வாய்ப்பு போன்ற தளங்களில் சிறப்புற கடமை ஆற்றியவர். 

முதுபெரும் பூர்வகுடி ஆளுமையும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில், வ.உ.சிதம்பரநாதருக்கும் முன்னவே கப்பல் வைத்து ஏற்றுமதி-இறக்குமதி செய்த வணிகருமான இராவ்பகதூர்‌ பெ.ம.மதுரைப்பிள்ளை அவர்களின் மகளான மீனாட்சி அம்மாளுடன் திருமணம் செய்துகொண்டார் வி.ஜி.வாசுதேவப்பிள்ளை. மீனாட்சி அம்மாள்-வி.ஜி.வாசுதேவப் பிள்ளை இணையரின் அருமை மகள்தான் அன்னை மீனாம்பாள் அவர்கள்; அருமை மருமகன் தந்தை சிவராஜ் அவர்கள்.  

பூர்வகுடி சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஓயாமல் உழைத்த ஐயா வி.ஜி. வாசுதேவபிள்ளை அவர்கள் 1937 ஆம் ஆண்டு, ஜூன் 28 ஆம் நள் தம்முடைய 59 ஆவது வயதில் இயற்கையடைந்தார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தீட்சா தின குறிப்புகள்.

ஸ்டாலின் தி 1  1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில்...