சனி, 16 டிசம்பர், 2023

அரசுத்துறையில் தொடரும் இந்துமயம்.

ஸ்டாலின் தி 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல்நிலையத்தில், 'குற்றங்கள் குறைய வேண்டும்' என்று கூறி காவல்நிலையத்தில் இந்து முறைப்படியான சடங்கு-சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டு, காவலர்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தக்கலை காவல்நிலையத்திலிருந்து மேளதாளத்துடன் வேலிமலை முருகன் கோயிலுக்கு காவடித்தூக்கிச் சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை பத்மநாபபுரம் நீதிமன்ற நீதிபதி பிரவீண் சிவா துவக்கி வைத்துள்ளார். பாஜகவின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இது ' பாரம்பரியமாக நடக்கும் சடங்கு' என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படி அரசு அலுவலகங்கள் இந்து மத சடங்குக் கூடாரங்களாக ஆக்கப்படுகின்றன. இது மதசார்பின்மைத் தன்மைக்கும்  சட்டத்திற்கும் எதிரானது என்று நாம் மட்டும் கூறவில்லை. பல்வேறு அரசாணைகளும் நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் கூறுகின்றன.

அண்ணா தலைமையிலான திமுக ஆட்சி தமிழகத்தில் மலர்ந்த போது 'அரசு அலுவலகங்களில் கடவுள்கள், சாமியார்கள், படங்களை மாட்டக் கூடாது என்றும், ஏற்கனவே மாட்டப்பட்டிரிந்தால் படிப்படியாக பிறர் கவனத்தை ஈர்க்காத வகையில் அகற்றிட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில்  29.4.1968 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனாலும் அந்த ஆணை காற்றில் பறக்க விடப்பட்டது. அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் தமிழக வருவாய்த்துறை மூலம் 'அரசு வளாகங்களில் மதம், வழிபாடு தொடர்பான புதிய கோயில்கள், வழிபாட்டுத் தளங்களைக் கட்டுவதும், ஏற்கனவே இருந்தால், அதைப் புதுப்பிக்கக்  கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதையும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அலட்சியப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஒரு வழக்கில் கடந்த மதுரை உயர்நீதிமன்றம் 17/3/2010 அன்று, 'அரசு வளாகங்களில் வழிபாட்டுத் தளங்கள், மத நிகழ்வுகள் நடப்பதைத் தடை செய்ய வேண்டும், 1993 ஆம் ஆண்டின் அரசாணையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அவ்வுத்தரவை , அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தமிழக  அரசு  22/4/2010 அன்று அனுப்பிவைத்தது. 

அதேபோல்,' காவல் நிலையங்களிலோ, காவலர் குடியிருப்பு வளாகத்திலோ, வழிபாட்டுத் தளங்களை அமைப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது' என்று கடந்த 2005 ஆம் ஆண்டு மே 28 ஆம் நாளில் அன்றைய தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் லத்திகா சரண் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். 

அரசாணைகளும், தீர்ப்புகளும் இப்படியிருக்க இவற்றை பாதுகாக்க வேண்டிய அரசுத்துறை அலுவலகங்களோ அரசாணைகளுக்கும் தீர்ப்புகளுக்கும், அரசியல் சட்ட வழிகாட்டீதலுக்கும் நேரெதிரான போக்கில் செயல்படுவது கடும் நடவடக்கைகளுட்பட்டது. 

எனவே, தக்கலை காவல் நிலையத்தில் மத சடங்கு நடத்திய காவல்துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மத சடங்கை துவக்கி வைத்த நீதிபதி ஆகியோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 
அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள கடவுள்கள் படங்கள், சிலைகள் அகற்றப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...