வியாழன், 21 டிசம்பர், 2023

புத்தரையும் அண்ணலையும் வழிபாடுவது பகுத்தறிவாகுமா?


ஸ்டாலின் தி 


புத்தரையும் அண்ணலையும் வழிபடுவது பகுத்தறிவாகுமா? 

இது தொடர்ந்து எழுந்துவரும் கேள்வி. வழிபாடு என்பது வெறுமனே உருவ வழிபாடாக சுருங்கிப்போனதன் காரணமே இத்தகைய கேள்விகள் எழுவதற்கு காரணமாகவும் இருக்கலாம். அல்லது, புத்தர், அண்ணல் உருவங்கள் மதிக்கப்படுவதை விரும்பாதவர்களிடமும் இத்தகைய கேள்விகள் எழலாம். எப்படியாகினும் இக்கேள்வியை நாம் ஒதுக்கிவிடத் தேவையில்லை.

வழிபாடு என்பதற்கு சரியான அர்த்தமாக 'வழிமுறையை பின்தொடரும் செயல்' என்பதாகவே நாம் கருதுகெறோம். 'பாடு' என்பதற்கு செயல்படுதல், கடமையாற்றுதல், வேலை செய்தல் போன்ற அர்த்தங்கள் உள்ளன. இதன்படியே, 'பாடுபடுதல், அரும்பாடு' ஆகிய சொற்கள் வழங்கப்படுகின்றன. வழிபாடு என்பது ஒரு வழியில் செயல்படுவது. அதாவது ஒரு வழியைக் காட்டும் தத்துவத்தில்-கொள்கையில்- செயல்படுவது. அவரவர் தேர்வு செய்யும் வழிகளில்-தத்துவங்களில்- முன் சென்ற மூத்தோரின் உருவங்களை வழிபடுவதையே உருவ வழிபாடு என்கிறோம். 

எனவே, புத்தர், அண்ணல் போன்றோர்களை வழிபடுதல் என்பது அவர்களின் தம்மத்தை செயல்படுத்துவதே ஆகும். அந்த சீரியக் கடமையைச் செய்யும் நோக்கிலேயே அவர்களுடைய உருவங்களையும் நாம் வணங்குகிறோம். இது மூடநம்பிக்கையல்ல. அறிவுடையோரை, அறவோரை வணங்குவது பகுத்தறிவின் முக்கியமான அம்சமாகவே நாம் கருதுகிறோம். அவ்வகையிலேயே, புத்தரும் அண்ணலும் வழிபாட்டுக்குரியவர்கள் ஆவார்கள் என்கிறோம்; வழிபடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...