புதன், 3 ஜனவரி, 2024

பாஞ்சாலி என்னும் பஞ்ச சீலி.



ஸ்டாலின் தி



பாண்டு என்பது பௌத்த அடையாளச் சொல். பாண்டு என்பது தாமரையைக் குறிக்கும் சொல். பாண்டு ரங்கன் என்பவர் புத்தர்தான் என்பது அண்ணலின் கூற்று. 

பஞ்ச பாண்டவர் என்பது பஞ்ச சீலத்தை போதித்த பௌத்தர்களைக் குறிக்கும். தமிழகத்தில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்த மலைகளை தற்காலத்திலும் பாண்டவ மலைகள் என்பது இதன் தொடர்புதான். பாண்டவர்களின் தந்தையின் பெயர் பாண்டு என்று மகாபாரதம் கூறுகிறது. பௌத்தர்களின் தலைவர் புத்தர் என்பதையே இக்கூற்று இவ்வாறு திரித்துள்ளது.

பாஞ்சாலி என்கிற பெண்ணின் நாடு பாஞ்சால நாடு என்கிறது பாரதம். பஞ்ச சீலநாடு என்பதையே இவ்வாறு பாரதம் திரிக்கிறது. பாஞ்சாலி என்கிற கதாபாத்திரம் தம்மம் என்னும் புத்தக் கோட்பாட்டை குறியீடாக கொண்டிருக்கிறது. பஞ்ச சீலி(சீலன் ஆண்பால்; சீலி பெண்பால்.)என்பதன் அடையாளம்தான் பாஞ்சாலி. பாஞ்சாலியின் துணையாக(கனவனாக) பாண்டவர்களை பாரதம் குறிப்பிடுவது தம்மத்தின் அரணாக பௌத்தர்கள் இருந்ததையேதான். சூதால் பாண்டவர்களிடமிருந்து பாஞ்சாலியை அபகரிப்பதென்பது, வஞ்சத்தால் தம்மத்தை இந்து சனாதனம் அபகரித்ததை திரிப்பதுதான். 

அதாவது, தம்மத்திற்கு பெண் வேடமிட்டு,  சூதுக்கடிமையாகி தம்மத்தை இழந்தவர்கென்கிற திரிபாக பாண்டவர்களையும் கதையாக்கி, தமது பார்ப்பனிய புரட்டை மகாபாரதம் எனும் கதையாடலின் வழியே  நிறுவியிருக்கிறது இந்து சனாதனம்.

மகாபாரத்ததை கட்டுடைத்தால் அதன் முக்கியமான கூற்றான 'தர்மத்தை சூது கவ்வும், தர்மமே வெல்லும்' என்பது 'தம்மத்தை சூது(பார்ப்பனியம்) கவ்வும்; தம்மமே(பௌத்தமே) வெல்லும்' என்கிற உண்மையாக வெளிப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...