திங்கள், 22 ஜனவரி, 2024

மகாயான இராமனும் தேரவாத இராவணனும்.


ஸ்டாலின் தி


இராமன் பௌத்தக் கதையில் ஒழுக்கமானவன். போதி சத்வராக உயர்ந்தவன். மகாயானத்தை களவாடிய வேடதாரிகள் வைணவமாக திரிந்தனர். தம்ம சக்கர புத்தரை சங்கு சக்கர விஷ்ணுவாக திரிந்தனர். போதி சத்வ இராமனை விஷ்ணுவின் அவதாரமாக திரித்தனர்.

இராவணன் தேரவாத பௌத்தத்தை பின்பற்றிய அரசன். இராவணன் வணங்கியது சிவலிங்கத்தை அல்ல; திரிலிங்கத்தை. லிங்கம் என்பது பௌத்த நெறிகள் பொறிக்கப்பட்ட தூண் ஆகும். திரி பிடக சூத்திரங்கள் பொறிக்கப்பட்ட தூண் திரி லிங்கம். லிங்கம் சிங்களத்தில் லங்கா ஆனது. திரி என்பதை தமிழ் சைவர்கள் திரு என்று மாற்றினார்கள். வடவ வைணவர்கள் ஸ்ரீ என்று மாற்றினார்கள். திரிக்குறள் திருக்குறளாக ஆக்கப்பட்டது போல; திரி ரங்கம் ஸ்ரீரங்கமாக ஆக்கப்பட்டதைப் போல, திரிலங்கா ஸ்ரீ லங்கா ஆக்கப்பட்டது. பௌத்த லங்கையின் அரசன் என்பதால் லங்கேஸ்வரன் எனப்பட்டான் இராவணன். ஈஸ்வரன் என்றால் அரசன் என்று பொருளாகும்.
பஞ்ச சீலமும் ஐம்புலனடக்கமும் இராவணன் கொண்டிருந்த பத்து தலைகள். 

மகாயானத்தை திரித்து உருவாக்கப்பட்ட வைணவம் மகாயான இராமனை வைணவனாக மதம் மாற்றியது. தேரவாதத்தை திரித்து உருவாக்கப்பட்ட சைவம் தேரவாத அரசன் இராவணனை சைவமாக மதம் மாற்றியது. இந்த கட்டாய மதமாற்றத்தை உறுதிப்படுத்தவே வால்மீகி இராமாயணம் உருவானது. அதை தமிழ் மரபில் பரப்புவதற்காத்தான் கம்பர் இராமாயணம் உருவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...