வெள்ளி, 26 ஜனவரி, 2024

தலைவர் எல்.சி.குருசாமி.


ஸ்டாலின் தி



1885 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாளில், தலித்(அருந்ததியர்) குடும்பத்தில் பிறந்த தலைவர் எல்.சி. குருசாமி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, தலைவராக திகழ்ந்தவராவார்.

1920 முதல் 1930 வரை பத்து வருடங்களுக்கு அவர் சென்னைச் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். தலைவர் எம்.சி.ராஜா அவர்களோடு இணைந்து பள்ளிகள் குறித்தும் மாணவர் நலன் குறித்தும் தொடர்ந்து குரல்கொடுத்தவராவார். இரண்டு இரவு பள்ளிகளையும் நடத்தி வந்த அவர் சத்துணவு திட்டத்தை அரசிடம் வலியுறுத்தினார். மாணவர் விடுதிகளையும் நடத்திவந்தார்.
 

1926 இல் கோடம்பாக்கம் கைத்தொழில் பள்ளி நலச்சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். நகரக் கூட்டுறவு வங்கியின் இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். சென்னை நகரசபைக் கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

அவருடைய சமுதாயப் பணியை பாராட்டி அவருக்கு
1927 இல் அவருக்கு “ராவ் சாகேப்” பட்டம் அளிக்கப்பட்டது. 
1929 இல் அவர் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்தார். 1932 இல் டெல்லியில் நிகழ்ந்த வாக்காளர்கள் கூட்டத்தில் அவர் தமது மதிப்பு வாய்ந்த யோசனைகளை வழங்கினார்.
1937 இல் நிகழ்ந்த ஆலய நுழைவைப் போராட்டத்திற்காக திருவாங்கூருக்கு பலரையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

சமூக முன்னேற்றம் காண பாடுபட்ட தலைவர் எல்.சி.குருசாமி அவர்களின் பிறந்த நாள் இன்று(ஜனவரி 27).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...