திங்கள், 26 பிப்ரவரி, 2024

தாதா இரட்டை மலை சீனிவாசனை சிறுமைப் படுத்துகிறதா திமுக அரசு?




ஸ்டாலின் தி


இன்று(27/2/2024) காணொளி வாயிலாக தமிழக முதல்வர் மணிமண்டபங்களையும் உருவச்சிலைகளையும் திறந்து வைக்கிறார். அவற்றில் தாதா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கான மணிமண்டபமும் ஒன்று. இதுக்குறித்த அரசு விளம்பரத்தில், மற்றவர்களுக்கு அவர்களுடைய பெயரின் முன்னொட்டாக பட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கோ அப்படியான எந்த அடையாளத்தையும் குறிப்பிட வில்லை. 

தாதா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலேயே இந்திய அளவில் புகழ் பெற்ற தலைவராக திகழ்ந்தவர். வட்ட மேசை மாநாடுகளில் பங்கேற்று சர்வதேச கவனத்தைப் பெற்றவர். பட்டம் படித்தவர், இதழயிலாளர். பூர்வகுடி மக்களுக்கான அரசியல் இயக்கத்தை நூற்றாண்டுகளுக்கும் முன்னரே கட்டியெழுப்பிய பெருந்தலைவர். இத்துனை சிறப்பிருந்தும் அவரை வெறுமனே 'பெயரால் மட்டுமே' அடையாளப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு.  

ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களுக்கு 'சர்' பட்டம் கிடைத்ததை நினைவில் கொண்ட திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு இராவ்சாகிப்’, ‘திவான் பகதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது நினைவுக்கு வரவில்லை போலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...