புதன், 21 பிப்ரவரி, 2024

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.



ஸ்டாலின் தி

சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ராணுவ வீரரான அவர், சமூகக் கொடுமைகளை எதிர்த்து சமர் செய்தவர். இவரது மிடுக்கானத் தோற்றமும், தீரமான சமூகப் பணியும் அவரை மக்களிடத்தில் மாவீரராக ஆக்கியன . சேரி மக்களோடு மட்டுமின்றி, சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருந்த, நரிக்குறவர் மக்களோடும் நெருக்கமாக இருந்தார். அவர்களின் மூத்தோர்களிடமிருந்தே, சிவப்பு நிற முண்டாசுக் கட்டும் பழக்கம் அவருக்கு வந்தது. 

அண்ணலுக்குப் பிறகு எழுந்த, இந்தியக் குடியரசுக் கட்சியின் முன்னோடித் தலைவராக கடமையாற்றிவர். தொடர்ந்து மக்களுக்காக, களத்தில் நின்ற அவர், தேர்தல் களத்தில் 1957 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1967 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் சீர்காழி தொகுதியில் நின்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1957 தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வெற்றி பெற்றார். 

ஊராட்சி மன்றத்தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்த வீரர் கே.பி.எஸ்.மணி அவர்கள் 1980 இல் பெரம்பலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கீழ்வெண்மணி படுகொலையின் போது, சட்டமன்றத்தில் உரக்கக் குரல்கொடுத்தவர் அவர். அவருடைய சட்டமன்ற உரைகள் வீரமிக்கதாக இன்றும் புகழப்படுகின்றன. 

(ஐயா கே.பி.எஸ்.மணி அவர்களின் பிறந்த நாள் இன்று-பிப்ரவரி 22)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...