ஸ்டாலின் தி
காஞ்சீபுரம் என்பது சில நூற்றாண்டுக்கும் முன்புவரையும் கூட பௌத்தம் செழித்திருந்த நகரமாக விளங்கியது என்பதை வரலாறும், தொல்லியல் பொருட்களும், இலக்கியமும் விளக்கிக் கொண்டிருக்கின்றன. போதி தம்மர் போன்ற மாபெரும் பௌத்த தலைவர்கள் செயல்பட்ட நகரம் காஞ்சீவரம். தாரா தேவி, மணிமேகலை போன்ற பௌத்த அறத்தலைவிகளுக்கு விகாரங்கள் அமைக்கப்பட்ட ஊர் அது. பௌத்தர்களின் கல்விக்கூடங்கள் அங்கே முன்பொரு காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையாக இருந்துள்ளன. பிற்காலத்தில் வந்த பிராமணிய(இந்து) மதம், பௌத்தர்களை ஒடுக்கி, பௌத்த விகாரங்களையும் மடங்களையும் பள்ளிகளையும் அபகரித்துக் கொண்டது என்பது வரலாறு. அப்படித்தான் தாராதேவி புத்த விகார் காமாட்சியம்மன் கோயிலானது; புத்த சங்க அற மடம், சைவ சங்கர மடமானது. அப்படித்தான் காஞ்சீ புத்த விகாரை ஒன்று ஏகாம்பரநாதர் கோயிலாக ஆக்கப்பட்டது. அதற்கான சாட்சியாகும் தான் அங்கே பௌத்த அடையாளங்கள் காணக்கிடைக்கின்றன.
இதுவரை, காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பதினோரு பௌத்த சிற்பங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அரிதாக பரிநிப்பான நிலை புத்தர் சிலை இங்கேதான் கிடைத்தது. ஆனால், அந்த சிலை 'காணாமல் போய்விட்டது.' அந்த சிலையுடன் இதுவரை எட்டு சிற்பங்கள் கிடைத்திருந்தன. தற்போது கோயிலின் சுற்றுவரில் செதுக்கப்பட்ட மூன்று புடைப்புச் சிற்ப வகையில் மூன்று புத்த சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நீதிமன்றங்களே 'சிவ லிங்கம்' போன்ற இந்து அடையாளம் காணப்படும் இடங்களை- அது பிற மதத்துக்கு உரிய இடமாக இருந்தாலும் கூட - இந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் காலம் இது. அதே நியாயத்தின்படி, பௌத்த அடையாளங்கள் கிடைக்கும் கோயில்களையும் இனி புத்த விகாரை என்று அறிவிக்க வேண்டும். அதன்படி, காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலை பௌத்த விகாராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக